Wednesday 1st of May 2024 09:23:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
அகில இலங்கை ஐக்கிய மக்கள் அமையத்தினரின் செய்தியார் சந்திப்பு!

அகில இலங்கை ஐக்கிய மக்கள் அமையத்தினரின் செய்தியார் சந்திப்பு!


அகில இலங்கை ஐக்கிய மக்கள் அமையத்தினரால் செய்தியாளர் சந்திபொன்று நேற்று (28) திருகோணமலை மல்லிகா விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் செயலாளராகிய திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான தங்கவேலாயுதம் காந்தரூபன் கருத்து தெரிவித்தார்.

குறித்த அமையமானது கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த இலங்கையின் அனைத்து கட்சிகளினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உருப்பினர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினை தமிழ் மக்கள் ஆதரித்தபோதிலும் தமிழ் மக்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச அவர்களை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் அச்சப்பட்டதாகவும் அதன் காரணமாக சஜித் பிரேம தாச அவர்களுக்கு தம் ஆதரவினை வழங்கியிருந்ததாக தெரிவித்து தமிழ்மக்கள் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். தற்போதைய நிலைமைகள் சுமூகமாக இருப்பதனாலும் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களுடைய செயற்பாடுகளில் தாம் திருப்தியடைந்திருப்பதனாலும் இம்முறை தேர்தலிலும் எதிர்காலத்திலும் தாம் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறுபட்ட கட்ச்சிகளின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதேச சபை உருப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE